புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே ஒரு அப்பாயின்ட்மென்ட்.. டோட்டல் பாண்டிச்சேரியிலும் கட்சி குளோஸ்.. அதிர்ச்சியில் தினகரன்!

40 அமமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : AMMK Barani karthikeyan joining dmk

    புதுவை: திரும்பவும் அமமுக துளிர்விட துவங்கி உள்ளது என்று நினைத்தால்.. புதுவையில் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது! ஒட்டுமொத்தமாக புதுச்சேரி அமமுக நிர்வாகிகள் 40 பேரும் விலகி... மிகப்பெரிய அதிர்ச்சியை தினகரனுக்கு தந்துள்ளனர்!

    தேர்தல் தோல்விக்கு பிறகு மனரீதியாக ரொம்பவே அப்செட்டில் இருந்தார் டிடிவி தினகரன். பிறகு தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டு, இப்படியே இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்து அதிரடியில் இறங்கினார்.

    முதல் வேலையாக கட்சியை பதிவு செய்தார். பிறகு அமமுகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதற்காக மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். அதன்படி திருச்சி, ராமநாதபுரம் என ஒவ்வொரு மாவட்டமாக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

    அமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..?அமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..?

    புதுச்சேரி

    புதுச்சேரி

    இதில் ஒரு பகுதியாக, கட்சியின் ஒருங்கிணைப்பு செயலாளர்களாக 6 பேரும், புதுச்சேரி அமமுக செயலாளராக பி.வேல்முருகனையும் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டதற்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    இதனால் கட்சியின், புதுவை துணைத் தலைவர், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் என அமமுகவின் நிர்வாகிகள் 40 பேருமே கூண்டோடு விலகி உள்ளனர். இதனால் புதுவை அமமுகவே சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. ஒரு சின்ன மாநிலத்தில் 40 நிர்வாகிகள் என்பதுதான் ஒரு கட்சியின் மிகப்பெரிய பலம்.

    அவசர ஆலோசனை

    அவசர ஆலோசனை

    ஆனால் 40 பேருமே இவ்வளவு கோபமாக வெளியேறி விட்டார்கள் என்றால், அந்த வேல்முருகன் யார்? அவர் ஒருவருக்காக இத்தனை பேர் விலக என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை. ஆனால் நியமன அறிவிப்பை பார்த்ததும், இந்த நிர்வாகிகள் எல்லாம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    சசிகலா

    சசிகலா

    இதற்கு பிறகுதான் ராஜினாமா கடிதத்தை டிடிவி தினகரனுக்கு எல்லாரும் சேர்ந்து அனுப்பி வைத்துள்ளனர். ஒரே ஒரு அறிவிப்பினால் புதுவையே காலியாகிவிட்டதுதான் இப்போதைய தினகரனின் ஷாக்! அது மட்டுமில்லை.. ஏற்கனவே கோபத்தில் உள்ள சசிகலா இதை எப்படி எடுத்து கொள்ள போகிறாரோ என்பது அடுத்த எதிர்பார்ப்பு!

    English summary
    Puducheery AMMK 40 Executives have resigend for TTV Dinakarans new announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X