புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிலும் கூடும் புதுச்சேரி சட்டப்பேரவை.. வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 30 ந்தேதி கூடுகின்றது. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கின்றார்.

Recommended Video

    அருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்! - வீடியோ

    புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டம் வரும் 30 ந்தேதி காலை 9.30 க்கு கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக மார்ச் 31 க்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மத்திய அரசின் நிதியை பெற்ற பின்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமாகி வருகின்றது.

    Puducherry assembly session start announcement

    இந்நிலையில் வரும் 30 ந் தேதி கூடவுள்ள பேரவை கூட்டத்தில் நிதிப்பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, அரசின் அடுத்த நான்கு மாத செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் ஒப்புதல் பெற உள்ளார்.

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தை விரைந்து முடிக்க உள்ளார்கள்.

    மேலும் கொரோனா தொற்றை தவிர்க்க, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மிகக்குறைந்த நேரம் மட்டுமே நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தில் பேரவைக்குள் உள்ளேயும், வெளியேவும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சட்டப்பேரவை நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

    English summary
    Puducherry assembly session start announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X