புதுச்சேரியில் கொரோனா எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சிவப்பு மண்டலமானது புதுச்சேரி
புதுச்சேரி: சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதால், புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியது.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் மொத்தம் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் இருந்து வந்த ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
செத்து போன நாயின் இறைச்சியை.. பிய்த்து எடுத்து சாப்பிட்ட தொழிலாளர்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. ஷாக்
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஏற்கனவே குணமந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். மாஹே பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது 21 பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வந்ததால் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து இருக்க வேண்டும் என்றார். மேலும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.