புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது.
Recommended Video
புதுவை சட்டசபைக்கு அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நியமன எம்.எல்.ஏ. பொறுப்பு வகித்துவந்த சங்கர் (70) வயது மாரடைப்பால் இன்று காலமாமனார். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது.. நியமன எம்.எல்.ஏ. சங்கர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.