புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் காலமானார்.. பொன்முடி அஞ்சலி
Recommended Video
புதுச்சேரி : முதல்வர் நாராயணசாமியின் தாயார் வியாழக் கிழமை மாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுவை முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். அவருக்கு வயது 96. வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் ஈஸ்வரி அம்மாள் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி வியாழக் கிழமை உயிரிழந்தார்.
இந்த தகவல், காஜ புயல் நிவாரண நிதி தொடர்பாக டெல்லி சென்றிருந்த முதல்வர் நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் புதுவை திரும்பினார். ஈஸ்வரி அம்மாளின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலை சொந்த ஊரான பூரணாங் குப்பத்தில் இறுதிசடங்கு நடக்கிறது.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.