புதுவை திமுக எம்.எல்.ஏ சிவா, முதல்வர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா- நாராயணசாமிக்கு மீண்டும் டெஸ்ட்
புதுச்சேரி: புதுவை திமுக எம்.எல்.ஏ. சிவாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் நாராயணசாமியின் அலுவலக உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையன்று 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,522 ஆக அதிகரித்தது. புதுவையில் மொத்தம் 159 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இம்மாநிலத்தில் அமைச்சர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் உருளையன்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ சிவாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
எட்டியே பார்க்காதீங்க..புதுவையில் சரக்குகள் மீதான கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
புதுவை முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பிரபுவுக்கும் கொரோனா உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது குறிப்பிடத்தக்கது.