யாரை தாக்குகிறார் ஆளுநர் கிரண்பேடி... காக்கை படங்களை வெளியிட்டதால் மீண்டும் சர்ச்சை
Recommended Video
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை காக்கை யோகா என பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் காக்கை படத்தை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
Two more pics of the day from RajNivas.Irresistible.Nature at peace pic.twitter.com/iLvjE3nGag
— Kiran Bedi (@thekiranbedi) February 20, 2019
ஆளுநர் மாளிகையில் 2 காக்கைகள் ஜோடியாகவும், ஒரு காக்கை தனியாக இருப்பது போன்ற படத்தை இன்று அவர் பதிவிட்டுள்ளார். இதே போல், கடந்த வாரம் காக்கை யோகா என்ற பெயரில் இரு காக்கைகள் அமர்ந்திருப்பது போல படம் ஒன்றை தமது ட்விட்டர் பக்கத்தில் கிரண்பேடி வெளியிட்டிருந்தார்.
அதில் தர்ணா என்பது யோகா ஆகுமா என செய்தியாளர் ஒருவர் தம்மிடம் கேள்வி எழுப்பினார் என்றும், அதற்கு, தர்ணாவும் யோகா தான் என்றும், என்ன நோக்கத்திற்காக, எந்த ஆசனத்தில் அமர்ந்து, என்ன சத்தம் எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தது என்றும் தாம் பதிலளித்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.
அதன் பிறகு, சிறிது நேரம் கழித்து புல்தரை விரிப்பின் மீது பூனை இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, தான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல யோகா என்பது 'சர்வமயம்' என கிரண்பேடி பதிவிட்டார்.
As I said yoga is Universal. This morning was the crow in the balcony. Earlier it was the cat on the mat.
— Kiran Bedi (@thekiranbedi) February 18, 2019
Daily Yoga at RajNivas. pic.twitter.com/QF3M5EYuUn
யோகா, தர்ணா, காக்கை என கிரண்பேடி, நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டலடிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், மீண்டும் காக்கை படத்தை ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ளார்.