ஒரே ஆட்சியில் 2 முறை பதவியேற்பு.. சாதனை படைத்த ஜான் குமார்.. நாராயணசாமி ஹேப்பி
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் 7170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு விழா இன்று சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட ஜான்குமாருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரே ஆட்சியில் இரண்டாவது முறை ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். ஏற்கனவே தனது நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அத்தொகுதியை முதலமைச்சர் நாராயணசாமிக்கு விட்டுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.