அலறும் புதுச்சேரி.. அரிவாள், கத்தியுடன் வெறி பிடித்து சுற்றி திரிந்த ரவுடிகள்.. சடலமாக மீட்பு.. ஷாக்
புதுச்சேரி: கையில் அரிவாள், கத்தியுடன் சுற்றி திரிந்தவர்கள் திடீரென சடலமாக கிடந்த சம்பவம் புதுச்சேரியை அலற வைத்துள்ளது.... முன் விரோதம் காரணமாக இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பத்தில் கடந்த 2-ம் தேதி படுபயங்கரமான கொலை நடந்துள்ளது.. வழுதாவூர் முரளிதரன் 19, கொடாத்தூர் சந்துரு 23, இந்த இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கொன்றது 10க்கும் மேற்பட்ட ஒரு கும்பல்.. இந்த சடலங்களை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர்.. விசாரணையும் ஆரம்பமானது.
அப்போதுதான் பைக் எரிப்பு முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.. இது தொடர்பான விசாரணை தீவிரமானது... அப்போது, சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர். 4 பேர் பிடிபட்டுள்ளனர். இதனிடையே இந்த 2 ரவுடிகளும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு . எதிர் தரப்பினருடன் ஒரு பெரிய மோதலே நடந்துள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த 32 வயது குழந்தை... சூன்யமான எதிர்காலம்
ஆளுக்கு ஒரு கையில் அரிவாளை பிடித்து கொண்டுள்ளனர்.. வெறிபிடித்தது போல மிருகத்தனமாக கத்தியை சுழட்டியபடியே அந்த பகுதியில் சுற்றி சுற்றி திரிகிறார்கள். இதில் முருளிதரனின் 2 கையிலும் 2 கத்தி உள்ளது.. சந்துரு கையில் தடி உள்ளது.
இந்த வீடியோதான் தற்போது முக்கிய ஆதாரமாக வில்லியனூர் போலீசாருக்கு மாறியுள்ளது.. விசாரணை படு தீவிரமாகி உள்ளது.. இளைய சமுதாயத்தினர் இப்படி கத்தி, அரிவாளுமாக சுற்றி திரிவது வேதனையாக உள்ளது!