புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவில் அரசியல் செய்ய மாட்டேன் என மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.. நாராயணசாமி பேட்டி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?

    புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் கொரோனாவிற்காக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்.

    Puducherry state chief minister V.Narayanasamy press conference on Coronavirus

    நானும் புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விரிவாக கூறினேன் என்றார்.

    தொடர்ந்து பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 995 கோடியும், புதுச்சேரியில் பொருளாதாரத்தை மேம்படுத்த 4 மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிதி ரூபாய் 360 கோடி அளிக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து, தவணை தொகையை கட்டுவதற்கு 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்.

    Puducherry state chief minister V.Narayanasamy press conference on Coronavirus

    மே மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும், மக்களின் பொருளாதாரம் பாதிக்காமல் மத்திய அரசு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் 3 ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

    Puducherry state chief minister V.Narayanasamy press conference on Coronavirus

    மேலும் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி தருவது குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா பற்றி மட்டுமே மோடி பேசியதாகவும், அதேபோல்

    Puducherry state chief minister V.Narayanasamy press conference on Coronavirus

    தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

    Puducherry state chief minister V.Narayanasamy press conference on Coronavirus

    மேலும் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி தருவது குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா பற்றி மட்டுமே மோடி பேசியதாகவும்,

    Puducherry state chief minister V.Narayanasamy press conference on Coronavirus

    அதேபோல் கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் உறுதியளித்துள்ளதாகவும், கொரோனாவை ஒழிக்க மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என தெரிவித்தார் முதலமைச்சர் நாராயணசாமி.

    English summary
    Puducherry state chief minister V.Narayanasamy press conference
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X