புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்தது!
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக பாகூர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களில் 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 2 பேர் ஜிப்மர் மருத்தவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104 ஆகவும் உள்ளது.
ஏற்கனவே 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 6 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் தற்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட 5 பேரில் 3 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
மேலும் ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர். மற்றொருவர் கோரிமேடு காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவலரின் பெண் ஆவார். இதுவரை 7,793 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 7,647 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 14 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
மின் திருட்டை தடுப்பதற்காக தான் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுகிறது.. எச். ராஜா பொளேர்