கட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் மற்றும் கட்டவுட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, ஆளுயர பேனர் மற்றும் சாலை நடுவில் பாதுகாப்பின்றி பாஜகவினர் ஆர்ச் வைத்துள்ளனர். இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் பேனர் மற்றும் கட்டவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக சார்பில் இன்று பிற்பகலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம் நகரப்பகுதி முழுவதும் சாலைகளின் ஓரத்தில் பிரதமர் மோடியை வரவேற்று ஆளுயர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சாலைகளின் நடுவே பிரம்மாண்ட ஆர்ச்சும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ச்சு போதிய பாதுகாப்பு இல்லாமல் கயிரால் கட்டப்பட்டுள்ளது. பலத்த காற்று அடித்தில் விழும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களின் நலனையும், வாகனஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பேனர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திராவிட கட்சிகள்தான் பேனர்கள் வைப்பதாக விமர்சனம் செய்து வந்தது பாஜக. இப்போது அந்த கட்சியும் அதையேத்தான் செய்கிறது என்கிறார்கள் மக்கள்.