புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியரான 74 வயது முதியவரை மர்மநபர்கள் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் காக்காயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(74). ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரான இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

Retired Jipmer Hospital staff was murdered in Pondicherry

இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது வீட்டு மாடியில் சுப்பிரமணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Retired Jipmer Hospital staff was murdered in Pondicherry

உடனடியாக இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணி, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Retired Jipmer Hospital staff was murdered in Pondicherry

இது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இவரது வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே பணத்திற்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Retired Jipmer Hospital staff was murdered in Pondicherry. Police investigation going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X