அலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்!
புதுச்சேரி ரவுடி அன்பு ரஜினி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
Recommended Video
புதுச்சேரி: ரவுடி ஜிம் பாண்டியனின் தலை கொத்தாக அறுக்கப்பட்டு 4 நாள்கூட ஆகவில்லை.. அதற்குள் ரவுடி அன்பு ரஜினியை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது புதுச்சேரியை அலற வைத்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி... ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் தமிழகம், புதுச்சேரி என பாகுபாடு இல்லாமல் இரு மாநிலங்களிலும் இவர் மீது உள்ளன.
புதுச்சேரிக்குள் பிற ரவுடி கோஷ்டிகளுடன் அன்பு ரஜினிக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கொஞ்ச நாட்களாக இவரை தீர்த்து கட்ட நிறைய சம்பவங்களும் நடந்ததாக தெரிகிறது. இந்த சமயத்தில்தான், இவர் சுற்றி வளைத்து கொல்லப்பட்டுள்ளார்.
காரில் இவர் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் இவர் மீது வெடிகுண்டு வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்த அன்பு ரஜினி, நடுவழியிலே காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால், அதற்குள் அந்த கும்பல் ரஜினியை சுற்றி வளைத்து கொண்டது. வசமாக சிக்கிய அன்பு ரஜினியை அரிவாளாலேயே சரமாரி வெட்டினர் அந்த மர்ம நபர்கள்.
தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!
இதில் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார் அன்பு ரஜினி. தகவலறிந்து முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கும்பல் யார், அன்பு ரஜினியை கொலை செய்ய காரணம் என்ன? என்பதெல்லாம் உடனடியாக தெரியவில்லை. எனினும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை துரிதமாகி வருகிறது.
இதே பாணியில்தான் ஜிம் பாண்டியனையும் கொலை செய்துள்ளனர். முதலில் வெடிகுண்டை வீசியும், அதன்பின்னர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியும் கொன்றுள்ளனர்.. ஒரே ஸ்டைலில் ஒரே வாரத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது புதுச்சேரி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.