நடுத் தெருவில் சரமாரி வெட்டு.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சாணி குமார்.. புதுச்சேரியில் அதிர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு, வெளியே வந்த பிரபல ரவுடியை மர்ம சராமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சமீபகாலமாக கொலைகள் அதிகரித்துள்ளன. சரமாரியான படுகொலைகளால் புதுவையே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. குறிப்பாக ரவுடிகள் கொலை அதிகரித்தவண்ணம் உள்ளது.
அந்த வகையில் இன்று ஒரு படுகொலை நடந்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் சாணி குமார். பெரிய ரவுடி.
தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி!
கலாம் நகர் சாணி குமார்
புதுச்சேரி வாணரப்பேட்டை அப்துல்கலாம் நகர் பகுதியை சார்ந்தவர் பிரபல ரௌடி சாணிகுமார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
ஆயுள் தண்டனைக் கைதி
இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சாணிகுமார், தண்டனை முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியே வந்துள்ளார். இதனிடையே நேற்று நள்ளிரவு வாணரப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா சாணிகுமார் கலந்துகொண்டுள்ளார்.
சரமாரி வெட்டு
அப்போது முகமூடி அணிந்துவந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ரவுடி சாணிகுமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். ஆனால் சாணிகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் சாணிகுமாரை அவரது வீட்டின் அருகே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
மக்கள் அதிர்ச்சி
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு வெடிகுண்டு வீச்சில் உயிர் தப்பிய ரவுடி, காலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.