இந்த 3 "டி"களால் மக்களுக்கு தொல்லையோ தொல்லை.. ஸ்டாலின்
புதுவை: 3 டிகளால் மக்களுக்கு தொல்லையோ தொல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் தட்டாஞ்சாவடியில் தேர்தல் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோர் ஆதரித்து பேசினார்.
அவர் பேசுகையில் புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி. அதிமுக- பாஜக கூட்டணியால் எதுவும் நடக்க போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கையே பொய்யானது.
ஏதோ வெளிநாட்டு பிரதமர் போல் செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி மோடி நடக்க விரும்புவதாக கூறியுள்ளார். அப்படி எனில் ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விரும்புவதாகும்.
பகைக் கூட்டத்தை கிழித்தெறிவோம்.. மோசடி அரசுகளை வீட்டுக்கு அனுப்புவோம்.. புதுச்சேரியில் ஸ்டாலின்
நாட்டுக்கு மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி, புதுவைக்கு கிரண் பேடி ஆகிய 3 "டி" களால் மக்கள் பெரும் தொல்லைக்குள்ளாகியுள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது.