மாணவர்கள் மோதல்.. விலக்கி விடப் போன எச்.எம்.. கொலை வெறித் தாக்குதல்.. மருத்துவமனையில் அனுமதி!
Recommended Video
புதுச்சேரி: மாணவர்களுக்கிடையே நடைபெற்ற சண்டையை விளக்கிவிடச் சென்ற தலைமை ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் காயமடைந்தார்.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயராமன். இங்கு பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஜலாலுதீன் சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்திலேயே சண்டை போட்டுள்ளார்.
இதனையறிந்து வந்த தலைமையாசிரியர் ஜெயராமன், சண்டையை தடுத்து நிறுத்தி, மாணவர்களை வகுப்பறைக்கு சென்று படிக்குமாறு கூறியுள்ளார். தலைமையாசிரியர் பேச்சைக் கேட்டு சக மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். ஆனால் ஜலாலுதீன் மட்டும் வகுப்புச் செல்லாமல், தலைமையாசிரியர் ஜெயராமனை ஒருமையில் பேசியுள்ளார்.
மேலும் தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை தலைமை ஆசிரியர் மீது வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தலைமையாசிரியர் ஜெயராமனை சக ஆசிரியர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஆரோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர் மீது மாணவன் ஒருவன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நலமுடன் திரும்பி சுஜித்.. புதுச்சேரியில் பழங்குடியினர் மனமுருக பிரார்த்தனை