வேல் யாத்திரையை நடத்த விடுங்க... போகிற இடமெல்லாம் அவமானம்தான் கிடைக்கும். சொல்வது தா. பாண்டியன்
புதுவை: பாஜகவின் வேல் யாத்திரையை நடத்த விடலாம்.. எப்படியும் போகிற இடம் எல்லாம் அவமானம்தான் கிடைக்கப் போகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
புதுவையில் செய்தியார்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:
டெல்லியில் டெபாசிட்டு வாங்க முடியாத புதுவையின் கிரண்பேடியை ஆளுநராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. புதுவையில் இலவச அரிசி வழங்க தடையாக ஆளுநர் கிரண்பேடி இருந்து வருகிறார்.
தமிழகத்தில் என்னதான் கர்ணம் அடித்தாலும் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. எந்த அணியை பாஜக அமைத்தாலும் சரி தமிழகத்தில் எதுவும் எடுபடாது. ஆட்சியை எல்லாம் விலை கொடுத்து வாங்கவும் முடியாது.
ரஜினிக்கு எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு போய் கட்சி தொடங்கலாமே.. சீமான் கடும் விமர்சனம்
தமிழக பாஜகவினர் வேல்யாத்திரையை நடத்த அனுமதிக்கலாம். ஏனெனில் அவர்கள் எங்கு போனாலும் அவமானம்தான் கிடைக்கும். தமிழகம் புதுவையில் திமுக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை. இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.