புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கீரை பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்... இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் கீரை பறிக்க சென்ற இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்துள்ள திருபுவனை கிராமத்தை சேர்ந்த செங்கேணி(60) மற்றும் விஜயா(55) ஆகிய இருவரும் திருபுவனை பகுதியில் உள்ள தோப்பில் கீரை பறிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு அடித்த சூறை காற்றால் அப்பகுதியில் மின்சார கம்பி அறுந்து கீழே விழே விழுந்துள்ளது.

Two womens dead attacked by the electricity

மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்திருப்பதை கவணிக்காத இருவரும் மின்சார கம்பி மீது கால் வைத்துள்ளார்கள். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஊருல என்ன பிரச்சினை.. லிஸ்ட் போடுங்க.. கலெக்டர் கிட்ட போய் கொண்டு கொடுங்க.. சீமான் அதிரடி! ஊருல என்ன பிரச்சினை.. லிஸ்ட் போடுங்க.. கலெக்டர் கிட்ட போய் கொண்டு கொடுங்க.. சீமான் அதிரடி!

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசாரும், மின்துறை ஊழியர்களும் உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரை பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two womens dead attacked by the electricity

வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இதனால், சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்வது, ஈரமான சுவர்களில் மின்சாரம் பாய்வது என உள்ளன. ஆகையால், கவனத்துடன் இருக்கும் படி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

English summary
Rainfall in Puducherry : Two womens dead attacked by the electricity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X