எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புற்றுநோய்.. புதுவை மருத்துவமனையில் அனுமதி
புதுவை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 75. இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமியின் விருதை பெற்றவர்.தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர்.
கடந்த ஓராண்டுக்கு முன் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.