குடிக்க பணம் தர மறுப்பு.. ஆடிட்டரை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் விடுதியில் மது அருந்த வந்த வயதான ஆடிட்டரை, மதுகுடிக்க பணம் கேட்டு 3 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உதைக்கும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் வெங்கடேசன். இவர் மிஷன் மீதியில் தனியார் மதுபான விடுதியில் வழக்கமாக மது அருந்துவது வழக்கம். அப்போது அங்கு குடிக்க வந்த 3 இளைஞர்களுடன் வெங்கடேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வபோது அவர்களுக்கும் மது அருந்த வெங்கடேசனே செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வழக்கம்போல் குடிக்க வந்த இளைஞர்கள், ஆடிட்டர் வெங்கடேசனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர். ஆனால் வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
கிம் கர்தஷியான் வீடு மீது குண்டு வீசலாமே.. ஜோக்கடித்த இந்திய பேராசிரியர்.. வேலை போச்சு!
இதனால் மது போதையில் இருந்த 3 இளைஞர்களும் வெங்கடேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.