எல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடல் ராஜா (34) ராமேஷ் (32).செந்தில் (37) உள்ளிட்ட மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மூன்று மீனவர்களையும் அவர்களது ஒரு படகையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. .முன்னதா கடந்த வாரம் :எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஏழு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக கூறித்தான், அந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்திருந்து. நெடுத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கைதாவது தொடர்கதையாக உள்ளது.