12 அடி நீளம்.. 20 கிலோ எடை.. வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு.... செய்த காரியம்.. அதிர்ந்த வெங்கடேஷ்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில்
12 அடி நீளம் எடையுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு மாடு கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்துவிட அங்கு சென்ற போது தொடர்ந்து கோழி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து வெங்கடேஷ் அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த மலைபாம்பை நார்த்தாமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு சுமார் 12 அடி நீளமும் 20-கிலோ எடையும் இருந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.