முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கல.. விடிய விடிய ஆபாச பேச்சு.. வேறு பெண்களுடன்.. ஜெயக்குமார் லீலைகள்!
வங்கி ஊழியர் எட்வின் ஜெயக்குமார் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது
புதுக்கோட்டை: முதலிரவில்கூட மனைவியிடம் நெருங்கவில்லையாம்.. தனி ரூமில் விடிய விடிய வேறு பெண்ணுடன் ஆபாசமாக பேசியுள்ளார் ஜெயக்குமார்... மொத்தம் 15 செல்போன்கள்.. அவைகளில் ஏராளமான நிர்வாண வீடியோ கால்கள்.. போட்டோக்களை கண்டு இளம் மனைவி அலறிவிட்டார்! காமகொடூரன் எட்வினை மனைவி போலீசில் சிக்க வைத்தது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்... வயது 36 ஆகிறது.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் பேங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.. கடந்த டிசம்பர் மாசம்தான் தஞ்சையை சேர்ந்த தாட்சர் என்பவருடன் கடந்த டிசம்பர் 2ம் தேதிதான் கல்யாணம் ஆகி உள்ளது.
ஆனால் முதலிரவில் மனைவியை பிரிந்து தனி ரூமுக்கு சென்றுவிட்டாராம்.. தாட்சருக்கு எதுவுமே புரியாமல் பார்த்தபோதுதான், ரூமில் எட்வின் செல்போனில் யாரிடமோ விடிய விடிய ஆபாசமாக பேசி கொண்டிருந்திருக்கிறார்.
மறுநாளும் இப்படியேதான் இருந்துள்ளார்... மனைவியிடம் நெருங்காமலும் தவிர்க்கவும்தான் தாட்சருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் எட்வின் ஒருநாள் வேலைக்கு போனதுமே, அந்த தனி அறையை தாட்சர் சோதனை செய்துள்ளார்... மொத்தம் 15 செல்போன்களை வைத்துள்ளார் எட்வின்.. அதில் எல்லாமே ஆபாச வீடியோக்கள்.
அவர்கள் அனைவரும் வேறு வேறு பெண்கள்.. நிர்வாண போட்டோக்கள்.. பெரும்பாலானோர் வங்கி கஸ்டமர்கள்தான்... ஜாலியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் எஸ்எம்எஸ்-களும் அந்த செல்போன்களில் இருந்துள்ளன.. தான் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றுகொண்டே குளிக்கும் வீடியோ, அதே நிலையில் நின்றுகொண்டே பெண்களிடம் பேசும் வீடியோகால் போன்றவையும் செல்போன்களில் பதிவாகி இருந்தது.
இதை பார்த்து பதறிபோய் மாமியார் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்ல அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம்.. இதன்பிறகுதான் நேரடியாக கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு "நீ குளிக்கும்போதுகூட வீடியோ எடுத்து வெச்சிருக்கேன்.. வெளியே சொன்னால் எல்லா வீடியோவையும் பதிவிட்டுவிடுவேன்" என்ற மிரட்டவும்தான் நடுங்கிவிட்டார் தாட்சர்.
விஷயம் எல்லாவற்றையும் மனைவி தெரிந்துகொண்டு விட்டதால், அவரை கோயிலுக்கு கூட்டி செல்வது போல 2 முறை கொல்லவும் முயற்சித்துள்ளார். இதற்கு பிறகுதான் தாட்சர் வல்லம் மகளிர் போலீசில் புகார் தந்துள்ளார்.. பிறகு தஞ்சை சரக டிஐஜி-யிடம் புகார் தந்தார்.... எட்வின் உட்பட அவரது குடும்பத்தார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Recommended Video
இந்த விஷயத்தை முன்னாடியே தெரிந்து கொண்ட எட்வின் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் வாங்கி கொண்டார்.. ஆனால் தாட்சர் விடவில்லை.. எட்வினின் செல்போனில் இருந்த அத்தனை ஆபாச, அந்தரங்க வீடியோ, போட்டோக்களை கோர்ட்டில் சமர்ப்பித்துவிட்டார்.. இப்போது, ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக எட்வின் உள்ளிட்டோரை கைது செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. தலைமறைவாக உள்ள எட்வினை போலீசார் தேடி வருகிறார்கள்.