திமுகவுக்கு தோல்வி பயம்... தேர்தலை நிறுத்த மறைமுக முயற்சி நடக்கிறது... ஹெச்.ராஜா விமர்சனம்
புதுக்கோட்டை: தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பல கட்சிகளை கூட்டிக் கொண்டு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்து வருகிறார்.
ஆர்.கே நகர் தொகுதியில் மட்டுமல்ல திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளால் அக்கட்சி 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். பெருவாரிய வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார். அப்போ, திமுக தானே தேர்தலை நடத்த முன்னணியில் நின்று இருக்க வேண்டும்.
ஆனால், தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, இடைத் தேர்தலை கண்டு ஸ்டாலின் தயங்குவதாகவும், திருவாரூர் இடைத்தேர்தலை முதலில் எதிர்பார்க்க வேண்டிய கட்சி திமுக-வாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.