லீவு தரல.. விஷம் குடிக்கறேன்.. ஆடியோ வெளியிட்ட 21 வயது பெண் போலீஸ் நந்தினியால் பரபரப்பு!
விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை: "லீவு தரல.. அதனால விஷம் குடிக்க போறேன்" என்று பெண் போலீஸ் ஒருவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சாமிநாதனின் மகள் நந்தினி வயது 21 ஆகிறது. புதுக்கோட்டை ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
பொன்னமராவதியில் போன வாரம் நடந்த போராட்டத்தின் போது அங்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்க எப்படி இருக்கு நிலவரம்.. காங்கிரஸ் ஜெயிச்சுரும்ல..லோக்சபா தேர்தலில் தீவிர ஆர்வம் காட்டும் திமுக
பாதுகாப்பு பணி
கொஞ்சம் கொஞ்சமாக அங்கு நிலைமை சீராகி வருவதால், பாதுகாப்பு போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் நந்தினியும் ஒருவர்.
ரைட்டர்
இவ்வளவு நாள் டியூட்டியில் இருந்த நந்தினி, நேற்று மாலை வேலை முடிந்த நிலையில் லீவு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் பணி பதிவு செய்யும் ஒ.எஸ். எழுத்தர் (ரைட்டர்), நந்தினிக்கு லீவு இல்லை என்று சொல்லியதுடன், திரும்பவும் டியூட்டி போடப்போவதாக சொல்லி இருக்கிறார்.
பூச்சி மருந்து
இதையடுத்து அங்கிருந்த போலீசார் நந்தினியை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு நந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நந்தினிக்கு சிகிச்சை
இதையடுத்து அங்கிருந்த போலீசார் நந்தினியை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு நந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.