புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

13 வயது சிறுமி.. தைல மரக்காட்டுக்குள் அட்டகாசம்.. பரிதாப மரணம்.. கந்தர்வக்கோட்டையில் ஷாக் சம்பவம்

தைல மரக்காட்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அவர் உயிரிழந்துள்ளார்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் தைல மரக்காட்டில் மயங்கி கிடந்தார் அந்த 13 வயது பெண்.. மர்மநபர்கள் தைல மரக்காட்டிற்குள் கடத்தி வந்து பெண்ணை கூட்டாக சேர்ந்து நாசம் செய்துள்ளனர்.. தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பிஞ்சை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.. பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கந்தர்வகோட்டையை அலற வைத்துள்ளது,

கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு வயது 13 ஆகிறது.. 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்..

 lockdown crime: 13 year old girl died by gang rape near pudukottai

இந்த கிராமத்தை ஒட்டி பாப்பான்குளம் என்ற பகுதி உள்ளது.. நேற்று அங்குள்ள குளத்துக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சிறுமி சென்றிருக்கிறார்.. அப்போது மர்மநபர்கள் சிறுமியை தைல மரக்காட்டிற்கு தூக்கி சென்றுள்ளனர்.. இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தைல மரக்காடு உள்ளது.

அங்குவைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது... சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் சொன்னார்கள்.

அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.. சிறுமியை நாசம் செய்தது யார், யார் என தெரியவில்லை.

1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு! என்ன நடக்கிறது உ.பி.யில்?1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு! என்ன நடக்கிறது உ.பி.யில்?

அதனால் அவர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. தைல மரக்காட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ததும், உடம்பெல்லாம் காயமடைந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாமல் போனதும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

English summary
lockdown crime: 13 year old girl died by gang rape near pudukottai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X