தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்ட டம்ளர்கள் திருட்டு.. மது அருந்த போலீஸே திருடியது அம்பலம்.. வைரல் வீடியோ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் டம்ளர் திருடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ளது மேற்பனைக்காடு. இங்கு கோடை காலத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து தண்ணீர் பந்தலை வைத்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர், மோர், சர்பத் ஆகியவற்றை சிறிய டம்ளர் மூலம் மக்களுக்கு வழங்கி வந்தனர்.
ஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்
அதிர்ச்சி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் தண்ணீர் பந்தலில் வைக்கும் டம்ளர்கள் காணாமல் போனது. இதனால் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிசிடிவி கேமரா
திருடுபவர்கள் மீது ஆதாரப்பூர்வமாக போலீஸில் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக தண்ணீர் பந்தலுக்கு நேராக நேற்று முன் தினம் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர்.
இளைஞர்கள் அதிர்ச்சி
இதையடுத்து நேற்று காலை தண்ணீர் பந்தலுக்கு வந்த போது டம்ளர்கள் மீண்டும் காணவில்லை. இதையடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டம்ளர் திருடம் போலீஸார்
அந்த டம்ளர்களை மதுகுடிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாரே திருடியது தெரியவந்தது. இருவரில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஐயப்பன் என்பதும், ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர் வடிவழகன் என்பதும் தெரியவந்தது.
|
டம்ளர்கள்
இதுகுறித்து உயரதிகாரிகளிடம் வீடியோவுடன் புகார் அளிக்கவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர். யாராவது திருடினால் அதை போலீஸில் புகார் அளிக்கலாம். ஆனால் இங்கு போலீஸே அதுவும் 50 ரூபாய் மதிப்புள்ள டம்ளர்களை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.