கருவேல மரத்துக்கு அடியில்.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது சிறுமியின் உடல்.. 29 வயது கொடூரன் கைது!
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
புதுக்கோட்டை: கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் கிடந்தது.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. சிறுமியை கதற கதற பலாத்காரம் செய்ததுடன், அடித்தே கொன்ற காமக்கொடூரனை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஏம்பல் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருதாள்... ஆனால் திடீரென மாயமாகிவிடவும், சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றிருப்பார் என்று பெற்றோர்கள் நினைத்தனர்.
ஆனால் நைட் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.. அதனால்தான் சந்தேகப்பட்டு சொந்தக்காரர் வீடுகளுக்கு சென்று தேட ஆரம்பித்தனர்.. ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.. இதனால், ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் தந்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். இதனிடையே, அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள சிறுமியின் சடலம் கிடந்தது.. கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்து.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. குறிப்பாக கால் பகுதியில் நிறைய காயங்கள் இருந்தன.
உடலை கைப்பற்றிய போலீஸார் போஸ்ட் மார்ட்டத்துக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் நேரிலேயே சென்று ஆய்வு நடத்தினார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்திருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பமானது.
ஒரே மர்மம்.. காதில் வழியும் ரத்தம்.. காயங்கள்.. சுருண்டு கிடந்த யானை சடலம்.. பரபரப்பில் தேக்கம்பட்டி
அப்போதுதான் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.. அவருக்கு 29 வயது.. விசாரணையில் சிறுமியை தான்தான் பலாத்காரம் செய்து, அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் என்ன நடக்கிறது? எத்தனை பிரச்சனைகள்தான் வெடித்து கிளம்பும் என தெரியவில்லை.. ஒரு பக்கம் கொரோனா, மற்றொரு பக்கம் சாத்தான்குளம் மரண விவகாரம் என மக்கள் அதிர்ச்சியில் சிக்கி வரும் நிலையில், இந்த சிறுமி விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது... இது என்ன நாடா?இல்லை காடா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.