சீனாவிலிருந்து வந்த புதுக்கோட்டை இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?
Recommended Video
புதுக்கோட்டை: சீனாவிலிருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் வுகான் நகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு 570 பேர் பலியாகிவிட்டனர். இந்த நோய் இதுவர் 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 70 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அந்தந்த நாட்டின் விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என சோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து திரும்பிய திருவாரூர், விழுப்புரத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என கண்டறிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறிய அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.