பல்வேறு குளறுபடி.. விராலிமலையில் 13 வாக்குச் சாவடிகளுக்கு நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றித்தில் 15ஆவது வார்டில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் 2ஆவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அச்சமயம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 15ஆவது வார்ட்டில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் நாளை மறுநாள் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.