புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதி விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி

புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு வந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு வந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து தெலுங்கானா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Road accident near Pudukkottai kills 10 Sabarimala devotees

தெலுங்கானாவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 12 பேர் சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு தெலுங்கானா நோக்கி சென்றுள்ளனர்.

இன்று மதியம் இவர்களின் வேன் புதுக்கோட்டை அருகே வரும் போது விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த வேன் மிகவும் அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக சென்ற வேன் மோதியுள்ளது.

இதில் அந்த வேனில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். 3 பேர் மருத்துவமனையில் பலியாகிவிட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேர் திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த எல்லோரும் தெலுங்கானா அருகே இருக்கும் காசிபேட் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனம் கட்டுபாட்டை இழந்து காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Road accident near Pudukkottai kills 10 Sabarimala devotees from Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X