தொடர் மழை.. இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended Video
புதுக்கோட்டை: தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் வரும் 6-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே புயலால் பாதித்த புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர்கள் கணேசன் மற்றும் கேசவன் ஆகியோர் முறையே விடுமுறை அறிவித்துள்ளனர்.
இந்த மழைக்கு காரணம் குறைந்த காற்றழுத்தம் அல்லது புயல் இல்லை என்று கூறப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.