அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டை: அதிமுக உள்ளவரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜ தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இஸ்லாமிய இளைஞர் பேரவை மற்றும் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வந்தாலும் உள்ளூரின் பெருமையை நிலை நாட்டுபவர்கள் என்றார். மேலும், அதிமுக உள்ளவரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திடீர் திருப்பம்.. பாஜக கூட்டணியில் இணைகிறதா திமுக? ஸ்டாலின் பேட்டியால் வெடித்த சர்ச்சை
முன்னதாக, மக்களுக்காக கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் திமுக தடுக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், அதிமுகவுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதால், அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.