கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா!
புனே: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்திய நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா கோவிஷீல்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளார்.
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியை தயாரித்து வருகிறது சீரம் இன்ஸ்ட்டிடியூட். இந்த தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த, கோவேக்சின் தடுப்பூசிக்கும்தான் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில், அடர் பூனாவாலாவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். ட்விட்டரில் இது தொடர்பாக, அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
I wish India & Sri @narendramodi ji great success in launching the world’s largest COVID vaccination roll-out. It brings me great pride that #COVISHIELD is part of this historic effort & to endorse it’s safety & efficacy, I join our health workers in taking the vaccine myself. pic.twitter.com/X7sNxjQBN6
— Adar Poonawalla (@adarpoonawalla) January 16, 2021
முகக் கவசம் அணிந்த ஒருவர் அடர் பூனவாலாவுக்கு, தடுப்பூசி போடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.