புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டி.ஆர்.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது!

Google Oneindia Tamil News

புணே: தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் டி.ஆர்.பி(TRP) நடைமுறையில் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனத்தின் பார்க்(BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்து வருகிறது.

BARCs Former CEO Arrested for TRP Ratings Scam

தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் TRP நடைமுறையில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. பார்வையாளர் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் தந்து குறிப்பிட்ட சேனலை மட்டும் ஓட வைத்து பார்வையாளர் மதிப்பீட்டு புள்ளிகளை உயர்த்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

'கடவுள் இல்லைனு சொல்லலை..இருந்தா நல்லாயிருக்கும்''..இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் தொ.பரமசிவன்தானாம்!'கடவுள் இல்லைனு சொல்லலை..இருந்தா நல்லாயிருக்கும்''..இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் தொ.பரமசிவன்தானாம்!

இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகினர். ஏற்கெனவே ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் BARC-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி புனேவை சேர்ந்த பார்த்தோ தாஸ்குப்தாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். புனேவின் ராஜ்காட் காவல் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு போலீசார் பார்த்தோ தாஸ்குப்தாவை கைது செய்துள்ளனர்.

அவரை வெள்ளிக்கிழமை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவர்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கில் மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்படும் 15-வது நபர் பார்த்தோ தாஸ்குப்தா ஆவார்.இந்த வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Former BARC CEO Bartholomew Dasgupta has been arrested on charges of tampering with the TRP's practice of counting television viewers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X