புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!!

By Staff
Google Oneindia Tamil News

புனே: ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகாவின் கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை புனேவில் இருக்கும் சசூன் பொது மருத்துவமனையில் சீரம் இன்ஸ்டிடியூட் நேற்று துவங்கியது.

இதுகுறித்து சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே அளித்து இருக்கும் பேட்டியில், ''நாங்கள் எங்களது மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு தயாரிப்பு கோவிஷீல்ட் தடுப்பு ஊசி மனித பரிசோதனையை துவக்கியுள்ளோம். 150-200 பேர் இந்த பரிசோதனையில் கலந்து கொண்டுள்ளனர்'' என்றார்.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!! இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!!

வித்யாபீடம்

வித்யாபீடம்

ஏற்கனவே கோவிஷீல்ட் மனித பரிசோதனையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீடம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனைகளில் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆஸ்ட்ராஜெனிகா

ஆஸ்ட்ராஜெனிகா

பிரிட்டன்-ஸ்வீடன் பார்மா நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. நடப்பு மாதத்தின் துவக்கத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் அனுமதி அளித்து இருந்தது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பு ஊசியை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் மனித பரிசோதனை நடத்துவதற்கும் அனுமதி பெற்றுள்ளது.

அனுமதி

அனுமதி

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இந்த தடுப்பு ஊசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி மறுத்து இருந்தது. மனித பரிசோதனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டு இருந்த காரணத்தினால் தடை விதிக்கப்பட்டது.

நரம்பு

நரம்பு

இதேபோல் பிரிட்டனிலும் ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டு இருந்தது. ஆனால், இது இந்த தடுப்பு ஊசியால் ஏற்பட்டதா அல்லது தடுப்பு ஊசி செலுத்தியதால் உடலில் இருந்த நோய் வெளியே தெரிந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருந்தது.

புனே ஆய்வு

புனே ஆய்வு

இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று புனேவில் இந்த பரிசோதனை தொடங்கலாம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

English summary
Coronavirus Vaccine Update: Oxford Covishield Phase-III trial to began in Pune
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X