புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடும் டெம்போவில்.. ராத்திரி முழுக்க.. கதற கதற பெண்ணை நாசம் செய்த டிரைவர் - கிளீனர்.. புனே பயங்கரம்!

Google Oneindia Tamil News

புனே: ஓடும் டெம்போவில் ராத்திரி முழுக்க பெண்ணை டிரைவரும் கிளீனரும் சேர்ந்து கதற கதற நாசம் செய்த சம்பவம் மகாராஷ்டிராவை உலுக்கி வருகிறது.

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.. இவருக்கு 29 வயதாகிறது. கடந்த 11ம் தேதி கணவனுடன் ஏதோ பிரச்சனை.. அதனால் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார்.

pune Woman molested case

கோபத்தில் வெளியே வந்தவருக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை.. எங்கெங்கோ நடந்து, கடைசியில் வழி தெரியாத இடத்தில் சிக்கி கொண்டார்.. அதற்குள் இரவு வந்துவிட்டது.இப்படி திக்குதெரியாமல் அலைந்து கொண்டிருப்பதற்கு பேசாமல் வீட்டுக்கு போய்விடலாம் என முடிவு செய்தார்.

ஆலந்தி ரோட்டில் நடந்துவந்தபோது, ஒரு டெம்போ அந்த பக்கமாக வந்தது.. அதனால் கைகாட்டி அந்த டெம்போவை நிறுத்தினார்... அந்த வண்டியில் டிரைவரும், கிளீனரும் மட்டும் இருந்தனர்.. அவர்களிடம் தன் வீட்டு அட்ரஸை சொல்லி அங்கே இறக்கிவிட முடியுமா என்று கேட்டார். அவர்களும் அப்பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டனர்.

ஆனால், அந்த பெண் சொன்ன இடத்திற்கும் இவர்கள் வண்டியை ஓட்டி சென்ற இடங்களுக்கும் சம்பந்தமே இல்லை.. டெம்போவை எங்கெங்கோ ஓட்டிச் சென்றனர். ஓடும் டெம்போவிலேயே இரவு முழுவதும் அந்த பெண்ணை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மோஷி, பிம்ப்ரி-சிஞ்ச்வட், ஹிஞ்சேவாடி, பூனாவலே என்று அந்த டெம்போ ராத்திரியெல்லாம் சுற்றியது.

விடிகாலை 4 மணி அளவில், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிரிக்கெட் கிரவுண்டில் இறக்கி விட்டுவிட்டு டிரைவரும் கிளீனரும் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டனர்... பாதிக்கப்பட்ட பெண் தட்டுதடுமாறி சிர்காவ் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்த சம்பவத்தை பற்றி புகார் சொன்னார். ஆனால் இவ்வளவு விஷயத்தை கேள்விப்பட்ட அந்த போலீஸாரோ, சம்பவம் நடந்தது ஆலந்தி பகுதியில்.. அதனால் அங்கே போய் புகார் கொடுங்கள் என்று அனுப்பி வைத்துள்ளனர்.

அதற்கு பிறகு அப்பெண் ஆலந்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் டிரைவர், கிளீனர் மாயமாகி உள்ளனர்.. அவர்களை தேடும் பணி நடக்கிறது.. இதனிடையே பெண்ணின் உடல்நிலை மோசமாகி உள்ளதால், ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது.

English summary
pune Woman molested case and police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X