புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்யாணம் ஆயிருச்சு.. குழந்தையும் இருக்கு.. ப்ளீஸ் விட்ரு.. கெஞ்சிய பேராசிரியை.. கொளுத்திய இளைஞர்!

தீ வைத்து கொளுத்தப்பட்ட கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

புனே: "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... குழந்தையும் இருக்கு.. ப்ளீஸ் என்னை விட்டுடு" என்று கெஞ்சியும்.. பட்டப்பகலில் காலேஜ் வாசலிலேயே பேராசிரியை ஒருவரை இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்தார்.. ஒரு வார கால தீவிர சிகிச்சையில் இருந்த பேராசிரியை இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மகாராஷ்ரா மாநிலம் வார்தா பகுதியில் ஒரு கல்லூரி இயங்கி வருகிறது.. இங்கு பேராசிரியையாக வேலை பார்த்தவர் அங்கிதா பிசுட்.. வயது 25!

காலேஜுக்கு டீச்சர் வழக்கமாக பஸ்ஸில்தான் வந்துபோவார்.. பிறகு பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஹிங்னகாட் நகரில் கொஞ்ச தூரம் நடந்து செல்வார்.. அப்படித்தான் கடந்த வாரமும் நடந்து போனார்.. காலேஜ் வாசலில் சென்றபோது திடீரென ஒரு இளைஞர் பைக்கில் வந்து வழி மறித்தார்.

சரி கார்த்தி.. கடல்ல குளிச்சிட்டு ஜெபம் பண்றேன்.. ஏசு, மாதா-க்கு கண்தெரிந்தால்.. வேற யாரு திவ்யாதான்சரி கார்த்தி.. கடல்ல குளிச்சிட்டு ஜெபம் பண்றேன்.. ஏசு, மாதா-க்கு கண்தெரிந்தால்.. வேற யாரு திவ்யாதான்

அலறினார்

அலறினார்

கையில் கொடு வந்திருந்த பெட்ரோலை எடுத்து டீச்சர் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.. உடம்பெல்லாம் தீப்பற்றி அலறினார்... அந்த வழியாக சென்று கொண்டிருந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை பார்த்து உடனடியாக இறங்கி ஓடிவந்தனர்.. அந்த பகுதியில் இருந்த தண்ணீரை அள்ளி கொண்டு வந்து டீச்சர் மீது ஊற்றி அணைத்தனர்.

சிகிச்சை

சிகிச்சை

பின்னர் படுகாயங்களுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு போய் அனுமதித்தனர்.. அதற்குள் ஆசிரியையின் உடம்பெல்லாம் கருகிவிட்டது.. 40 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான முறையில் சிகிக்சை பெற்று வந்தார். இது சம்பந்தமான விசாரணையில், டீச்சருக்கு கல்யாணம் ஆகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளதாம்.. ஆனால் கல்யாணம் ஆனது தெரிந்தும் விக்கி நாக்ரலே என்பவர் டீச்சரை விரட்டி விரட்டி காதலித்து லவ் டார்ச்சர் தந்துள்ளார்.

ஆத்திரம்

ஆத்திரம்

தனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று பலமுறை சொல்லியும் அந்த இளைஞர் கேட்கவே இல்லை.. தன்னை காதலிக்கும்படி, கல்யாணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.. இந்த ஆத்திரத்தில்தான் வழக்கமாக செல்லும் பாதையை தெரிந்து வைத்து கொண்டு பைக்கில் வந்து பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த டீச்சர், பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.. காலேஜ் வாசலிலேயே டீச்சரை உயிருடன் எரித்து கொன்ற இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதில் என்ன ஒரு கொடுமை என்றால், தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தையும் இருக்கிறதாம்!

English summary
man sets college lecturer ablaze in wardha near maharashtra due to love issue, but she died now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X