புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலிரவு முடிந்தவுடன்தான் "அது" தெரிந்தது.. அதிர்ந்து போன புதுப் பெண்.. கடைசியில் நடந்த கொடுமை!

மகாராஷ்டிராவில் கணவன் மீது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

புனே: முதலிரவு முடிந்தவுடன்தான் விஷயமே புரிந்தது.. அந்த உண்மை தெரிந்ததும் அதிர்ந்து போய்விட்டார் கல்யாண பெண்.. கடைசியில் கோர்ட் புகார் வரை சென்றிருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மீரா சாலையை சேர்ந்த நபருக்கு 29 வயதாகிறது.. ரொம்ப நாளாக பெண் தேடி கடைசியில் சமீபத்தில்தான் கல்யாணம் ஆனது.

Wife complaint against Husband after First Night

இந்நிலையில், அந்த கல்யாண பெண் திடீரென தன்னுடைய கணவர், குடும்ப உறுப்பினர்கள் மீது நயநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்தார்.. அதில், கடந்த செப்டம்பரில் எனக்கு கல்யாணம் ஆனது.. முதலிரவில் என்னை பற்றின எல்லா உண்மையும் சொன்னேன்.. ஆனால் அவர் எதையும் சொல்லவில்லை.. முதலிரவு முடிந்தது.. பிறகுதான் அவருக்கு தலையில் வழுக்கை இருப்பது தெரிந்தது.

முதலிரவு அன்று விக் வைத்து அந்த வழுக்கையை மறைத்துள்ளார்.. நானும் இது தெரியாமலேயே அவருக்கு மனைவியாகி விட்டேன்... இப்படியே 2 மாசம் குடும்பமும் நடத்தியாகிவிட்டது.. விக் விஷயம் இப்போதுதான் எனக்கு தெரிந்தது.. வழுக்கை இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றியதால் அவர் மீதும், அவருடைய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகார் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நயா நகர் இன்ஸ்பெக்டர் கைலாஷ் பிரேவ் ஒரு பேட்டி அளித்தார்.. அதில், "சம்பந்தப்பட்ட கல்யாண பெண்ணுக்கும், மாமியாருக்கும் பிரச்சினை இருந்துள்ளது.. வழுக்கை குறித்து தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், வரதட்சணைக்காக மாமியார் தன்னை துன்புறுத்துவதாகவும் அந்த பெண் சொல்லி உள்ளார்.. கணவனுக்கு புதுபொண்டாட்டி மீதும் சந்தேகம் இருந்திருக்கிறது.

மனைவியின் செல்போனை ஹேக் செய்து சேட்டிங், வீடியோ கால், மெசேஜ்களை அடிக்கடி கண்காணித்து வருவதாகவும் புகாரில் சொல்கிறார்.. இதை தவிர, மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்து கொண்டாராம்.. இதையடுத்து, வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டு தரப்பினர் முன் ஜாமீன் கோரி கோர்ட் வாசலை மிதித்துள்ளனர்.. ஆனால், அந்த ஜாமீன் மனுவை கோர்ட் நிராகரித்துவிட்டது.. இப்போது பெண்ணின் கணவன், அவரது குடும்பத்திரைன போலீஸ் முன் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.. விரைவில் அவர்களை கைது செய்வோம்" என்றார்.

English summary
Wife complaint against Husband after First Night
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X