மோடி எப்போ விலகுகிறாரோ... அப்போ நானும் போய்டுவேன்.. அட... சொன்னது இவரா?
புனே: மோடி எப்போது அரசியலை விட்டு விலகுகிறாரோ.. அப்போதே நானும் அரசியலை விட்டு விலகிவிடுவேன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியுள்ளார்.
புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது ஸ்மிருதி இராணியிடம் ஒருவர், எப்போது உங்களை பிரதமராக பார்க்க முடியும்? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு ஸ்மிருதி இராணி கூறியதாவது:
Smriti Irani on being asked 'when will one see pradhan sevak Smriti Irani", at Words Count festival in Pune: Never.I entered politics to work under charismatic leaders.I was very lucky to work under leadership of late Atal Bihari Vajpayee&I'm currently serving under Narendra Modi pic.twitter.com/liXxvPYuxf
— ANI (@ANI) February 4, 2019
எப்போதுமே கிடையாது. அரசியலில் ஆற்றல் வாய்ந்த தலைவர்களின் கீழ் பணியாற்றவே நுழைந்தேன். வாஜ்பாய்க்கு கீழ் பணி செய்தது எனக்கு வாய்த்த பாக்கியம். இப்போது நான் பிரதமர் மோடிக்குக் கீழ் வேலை செய்வதும் பெருமையே.
எப்போது பிரதமர் மோடி, அரசியலை விட்டு விலகுகிறாரோ, அப்போது நானும் அரசியலை விட்டு விலகிவிடுவேன். இப்படி சொல்வதன் மூலம் மோடி, வெகு காலம் இந்திய அரசியலில் ஈடுபட மாட்டாரா என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
அவர் இன்னும் வெகு நாட்களுக்கு களத்தில் இருப்பார். அரசியலில் எத்தனை காலம் நீடித்திருக்க வேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன் என்று கூறினார்.