இன்று அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நினைவிடம்
ராமேஸ்வரம்: இன்று அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் மரணமடைந்தார். ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் இவர் 1998ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத பரிசோதனையில் முக்கிய பங்காற்றினார்.
இவரது பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவரது சொந்த மாவட்டமான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
இன்று 5-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடம் வண்ணவிளக்குகளால் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படும். ஆனால் இந்த கொரோனாவால் இந்த ஆண்டு கூட்டு பிரார்த்தனைகள் நடப்பது சந்தேகமே.
ரேஷன் கடைகளில் இனி அரிசியுடன் சேர்த்து மாஸ்க்கும் ஃப்ரீ!.. ஆளுக்கு ரெண்டு.. இன்று முதல் தொடக்கம்