ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.. 3 பேர் பலி
ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூரில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி சென்ற அரசுப்பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிவந்த காரும் நேருக்கு நேர்மோதியது.
இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த 7 பேரில் அருண், உமையபாலா, விஜயராஜ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மீதமுள்ள 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.