ராமநாதபுரத்தில் கார்- வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி.. 21 பேர் படுகாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காரும் வேனும் மோதி நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அருகே உச்சிபுளியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கார் ஒன்றும், மினி வேன் ஒன்றும் எதிர் எதிர்திசையில் வந்துள்ள போது விபத்து நிகழ்ந்துள்ளது.
காருக்கு பின் வந்த இன்னொரு வேனும் காரின் பின்பக்கம் வேகமாக மோதி இருக்கிறது. இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. மினி வேன் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .
இந்த மோசமான விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதில் வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மருத்துவமனையில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamil Nadu: 2 people killed, 21 people injured after 3 vehicles collided near Uchipuli, in Ramanathapuram district, in the early morning hours today. pic.twitter.com/7YvLB68eGf
— ANI (@ANI) March 5, 2019
இறந்த இருவரது உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.