Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்
டூவீலர் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் படுகாயம்
Recommended Video
ராமநாதபுரம்: ஒரே செகண்ட்தான்.. பெட்ரோல் போட்டுக்கிட்டு டூவீலர் ஓட்டி வந்த இளம்பெண் மீது பஸ் வேகமாக மோதி நின்றது.
ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஒரு பெண் தனது டூவிலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையில் செல்ல முயன்றார்.
அது பிரதான சாலை என்பதால், பஸ், லாரிகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. சாலையை கடக்க முயன்ற பெண் பின்னாடி, பஸ் வருகிறதா என்றுகூட பார்க்கவில்லை.
டூவீலருடன் சாலையின் எதிர்புறம் கடக்க, அந்த சமயத்தில் பின்னாடி வந்த நிஜாம் என்ற சொகுசு பஸ் படு வேகமாக அந்த பெண் மீது மோதியது. இதில் டூவீலருடன் சேர்ந்து அந்தப் பெண் பல அடி தூரத்தில் போய் விழுந்தார்.
மும்பையில் கனமழை: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
எந்தவித அசைவுமின்றி பெண் விழுந்து கிடக்கவும், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஸ் வருகிறதா என்று பெண்ணும் திரும்பி பார்க்கவில்லை, ஒரு பெண் சாலையின் குறுக்கே வருகிறாரே என்று பஸ் டிரைவரும் பார்க்கவில்லை.. அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.