ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீச்சரை பின்னாடியே துரத்தி சென்று.. கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே... அலறிய ராமநாதபுரம்

மனைவியை கொன்ற கணவன் கைதானார்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே ஒரு டீச்சரை வெட்டி கொன்றுவிட்டார்கள்.. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கந்தியான் வலசை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. பரமக்குடியில் வசித்து வருகிறார்.. மனைவி பெயர் சிவபாலா.. 32 வயதாகிறது.. இருவரும் லவ் மேரேஜ் செய்து கொண்டவர்கள். 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன.

 Husband killed wife in Ramnad due to family Issue

சிவபாலா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், சரவணனுக்கு டீச்சர் மீது சந்தேகம்.. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.. இதனால் வெறுத்து போன டீச்சர், சரவணனை டைவர்ஸ் செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டார்.. அதனால் பிரிந்து வாழவும் ஆரம்பித்தனர்.

கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடரப்பட்டது.. இந்த வழக்கு ராமநாதபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்தும் வந்தது.. அந்த விசாரணைக்காக சிவபாலா ஆஜராகி உள்ளார்.. ஆனால், சரவணன் கோர்ட்டுக்கு வரவில்லை.. எனவே, ஜனவரி 5-ம் தேதிக்கு விசாரணையை கோர்ட் ஒத்திவைத்தது.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்து, ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தார் சிவபாலா.. அப்போது பின்னாடியே வந்த சரவணன், கத்தியால் சிவபாலாவை அரிவாளால் வெட்டி சாய்த்தார்.. சிவபாலாவின் அலறல் சத்தம் கேட்கவும், அங்கிருந்தோர் ஓடிவருவதற்குள் சிவபாலா உயிர் பிரிந்தது.. பிறகு அதை பார்த்த சரவணன் தப்பி ஓட முயன்றார்.. அதற்குள் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.. கேணிக்கரை போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.. பிறகு போலீசார் விரைந்து பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர்.

இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு பக்கத்திலேயே டிஐஜி, எஸ்பி ஆபீஸ்கள் உள்ளன.. அருகிலேயே கலெக்டர் ஆபீசும் உள்ளது.. எனினும் சிறிதும் அச்சமின்றி சரவணன் மனைவியை கொன்றுள்ளார்.. விவகாரத்து வேண்டாம், பேசி தீர்த்து கொள்ளலாம் என்று சொல்லியும், அதற்கு டீச்சர் கேட்கவில்லையாம்.. அந்த ஆத்திரத்திலேயே கொலையை செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணை நடக்கிறது.

English summary
Husband killed wife in Ramnad due to family Issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X