ராமநாதபுரம் அருகே காதலனுடன் இளம் பெண் ஓட்டம்.. வீடுகளை சூறையாடி கும்பல்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், காதலனின் வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை குமாரும், ரம்ய பிரபாவும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.இரு வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மாயமாகினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், ரம்ய பிரபாவை கூட்டிச் சென்ற குமாரின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
8 ஓட்டு வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். குடிசை ஒன்றுக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரியகுளம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திறகு வந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சாயல்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.