அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை!
ராமேஸ்வரம்: அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது அதிமுக எம்பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்றும் அதிமுகவில் பல பிளவுகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கு ஆளும் கட்சி தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் தம்பிதுரை.
திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.. மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.. ஓ.பி.எஸ் சொல்கிறார்
அப்போது திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்பி தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணையாக இருக்கிறார்.மேலும், அ.தி.மு.க., ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது, என்றார்.