கன்னத்தில் ஓங்கி அறைந்த "விஜயகாந்த்".. கழுத்தில் கடித்த கர்ணன்.. நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை
Recommended Video
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற டாடா ஏசி வாகன ஓட்டுநரும் போக்குவரத்து காவல் ஆய்வாளரும் கட்டிப் புரண்டு வீதியில் சண்டையிட்டு கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் பஜார் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சக காவலர்களுடன் காவல் ஆய்வாளர் விஜயகாந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு டாடா ஏசர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
அந்த வாகனத்தை காவலர்கள் நிறுத்தினார்கள். போலீஸார் கைக்காட்டியும் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை காவல் ஆய்வாளர் விஜயகாந்த் விரட்டி பிடித்தார்.
அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் கர்ணனை விஜயகாந்த் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டனர்.
அப்போது விஜயகாந்த் கழுத்தில் கர்ணன் கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கர்ணனை சக காவலர்கள் விலக்கிவிட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.