பெயர்தான் பிரகாஷ்.. செஞ்சதெல்லாம் கருமம்.. "ஹோமோ".. அழகிகளுடன் கொண்டாட்டம்.. அதிர்ந்து போன போலீஸ்!
பண மோசடி உள்ளிட்ட புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம்: ஹோமோ செக்ஸ் + அழகிகள் + நடிகைகள் + நிர்வாண படம் + பண மோசடி + டெண்டர் ... இப்படி ஏகப்பட்ட கசமுசாக்களில் வசமாக சிக்கி, தற்போது கம்பி எண்ணி கொண்டுள்ளார் காம பிண்டம் பிரகாஷ் என்பவர்! விசாரணையில் அவரை பற்றின தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருவதை கண்டு போலீசாரே மிரண்டு விட்டனர்!
திருவண்ணாமலை மாவட்ட கோட்டையூரை சேர்ந்தவர் பிரகாஷ்.. இவருக்கு 28 வயதாகிறது.. ஸ்மார்ட் லுக், காஸ்ட்லி டிரஸ் என்பதுதான் பிரகாஷின் அக்மார்க் முத்திரை.
ஆனால் செய்வது பூராவும் மொள்ளமாரி வேலைகள்தான்.. ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி அதிகாரி இப்படி பல அவதாரங்களை எடுத்து, ஊரை அடித்து உலையில் போடுவதுதான் தொழில்!
வேலூர் சிறையில் முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பு ஏன்? அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
விஐபிக்கள்
இவருக்கு சில விஐபிக்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் போலும்.. அந்த தைரியத்தில், ஆட்டம் போட்டுள்ளார்.. அழகிகளுடன் ஜாலி, பார்ட்டிகள், நிர்வாண படம் எடுத்து மிரட்டுதல் என்று பணத்தை அள்ளி உள்ளார்.. இதைவிட ஹைலைட் இவருக்கு ஹோமோ செக்ஸ் பழக்கமும் உள்ளதாம்!
டெய்ஸி
இவரை பற்றி முதன்முதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டெய்ஸி என்ற ரிடையர் ஆசிரியர்தான் முதல்வர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினார்.. அதற்கு பிறகு நம் போலீசார் கோதாவில் குதித்து பிரகாஷ் மீது அதிரடியை காட்டி, இப்போது தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள்.
வேலை
எத்தனையோ பேர் பிரகாஷின் சைரன் ஜீப்பை பார்த்தே நம்பி பணத்தை கொட்டி உள்ளனர்.. ஒருகட்டத்தில் தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதற்காகவும், கவர்ன்மென்ட் வேலை வாங்கி தருவதாகம் சொல்லி கதை அளந்தார்.. இப்படி கலர் கலராக அவிழ்த்து விடவும்தான் இவரிடம் லட்சக்கணக்கில் தனித்தனியாக பலர் ஏமாந்துள்ளனர்.. ஒரு கையில் பணம், இன்னொரு கையில் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் என்று அடித்து பேசி தன்னை நாடி வருபவர்களை நம்ப வைப்பார் பிரகாஷ்.
ரூ.45 லட்சம்
புகார் தந்த டெய்சியும் தன் மகன், உறவினர்களின் அரசு வேலைக்கு 45 லட்சம் ரூபாய் பிரகாஷிடம் தந்துள்ளார்.. சைரன் வைத்த காரில், டிப்டாப்பாக வந்து பணம் கேட்கவும், பணத்தை மட்டும் வாங்கி கொண்டு, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் தராமல் சைரன் வண்டியை கிளப்பி சென்றுவிட்டார் பிரகாஷ்.. பிறகுதான் போலீஸ்வரை புகார் சென்றது.
ஹோமோ செக்ஸ்
கோடிக்கணக்கான ரூபாய்களை பிரகாஷ் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.அப்போதுதான் பிரகாஷ் பற்றின மற்ற சமாச்சாரங்களும் வெளிவந்தன. மோசடி செய்தபணத்தில், ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு, குடித்து கும்மாளம் அடிப்பது, நடிகைகள், மாடலிங் அழகிகளுடன் ஜாலியாக இருப்பது... சிலரை சிலரோடு ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்தி அதையும் செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு பணம் பறிப்பது.
அமைச்சர்கள்
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பிரகாஷ் மீது பகீர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன... நிறைய விஐபிக்களுடன் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு கொள்வாராம்.. அமைச்சர்கள் தொடங்கி, நடிகர்கள், டைரக்டர் வரை தனக்கு ரொம்பவும் குளோஸ் என்று புருடா விடுவாராம்.. 4 எம்பி., 10 எம்எல்ஏக்களையும் தன் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்றும் சொல்வாராம்..
பின்னணி
ஆனால் இவ்வளவு பேர் இல்லாவிட்டாலும், யாரோ 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பிரகாஷூக்கு உடந்தையாக உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் இவ்வளவு ஆட்டம் போட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. டெண்டர் விட்டே 600 கோடியை சுருட்டினாராம்.. இதெல்லாம் தனிப்பட்ட நபரால் செய்ய கூடிய காரியம் இல்லை என்றாலும், பின்னணியில் யார் யார் உள்ளனர் என்ற விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.